பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய புயலினால் 10 பேர் பலி!

You are currently viewing பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய புயலினால் 10 பேர் பலி!

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய புயலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில்நேற்று முன்தினம் புயலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதோடு, ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு, வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments