புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 21.11.1990.
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……
“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.
புலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச்
செய்தியினை தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .மேலும் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றி வீரசாவடைந்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம் இவ்வாழ்த்து செய்தியினை .
![புலிகளின் குரல் வானொலிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி. 1](https://api.thaarakam.com/Images/News/2020/11/9FNuapGLN8SuV7rH8T3J.jpg)
தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி:
சிங்களப் பேரினவாத அரசானது, எமக்கு எதிராக ஓர் ஆயுதப் போரை மட்டுமன்றி
ஒரு கருத்துப் போரையும் நடத்தி வருகின்றது. உண்மைகளை மூடிமறைத்து, பொய்
யையும் ,புரட்டையும் நுட்பமாகப் புனைந்து, சாணாக்கியத் திறமையோடு நடத்தப்படும் இந்தக் கருத்துப்போரின் முக்கிய குறிக்கோள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் கற்பிப்பதாகும்
![புலிகளின் குரல் வானொலிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி. 2](https://api.thaarakam.com/Images/News/2020/11/WsnPmuLbCRqtOqQJSXcC.jpg)
ஒரு இனத்தின் தேச விடுதலைப் போர் என்ற பரிமாணத்தில் எமது விடுதலைப் போராட்டம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது . அத்தோடு
போரியற் கலையிலும் எமது இயக்கம் பெற்று வரும் அபார சாதனைகள் சர்வ தேசத்தை திகைப்பிலும் ஆழ்த்தி வருகின்றது
இப்படியாக எமது இயக்கமும் எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக
ரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரி
னவாதம் , எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான
பிரச்சாரப் போரை நடத்தி வருகின்றது. வீரம் செறிந்த எமது விடுதலைப் படை யணிகளை குழந்தை இராணுவம் எனக் கொச்சைப் படுத்தியும், நுட்பம் மிக்க எமது
போர் நடவடிக்கைகளை பயங்கரவாதம் எனச் சித்தரித்தும் எமது இயக்கத்திற்கு
இழிவு தேட முற்படுகிறான் எதிரி. அனைத்துலக ரீதியாக எமக்கு அணிதிரண்டு வரும் ஆதரவையும், அனுதாபத்தையும், தடுத்து நிறுத்தி உலக அரங்கினை எமக்கு எதிராகத் திருப்பிவிடுவதே எதிரியின் நோக்கம். சிங்களத்தின் பொய்யான பரப்புரைகளை விசாரணையின்றி விழுங்கிக்கொண்ட ஒரு சில நாடுகள் எமது இயக்கத்திற்கு பயங்கரவாதமுத்திரை
குததி தடை செய்தும் உள்ளன இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகின்றது
பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படும் சிங்களத்தின் விசமத்தமான கருத் களதத விசமத்தனமான கருத்துப்போரை, முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டு நிற்கும் முக்கிய சவாலாகும்
எமது இயக்கத்தின் முக்கிய மக்கள் தொடர்புச் சாதனமான புலிகளின் குரல்
வானோசையின் பணி பெரிதும் பாராட்டத்தக்கது
உண்மையின் குரலாக ஒலித்து, ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகக் குரல் எழுப்பி, எமது விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்குமாக புலிகளின் குரல் ஆற்றி வரும் பணி அற்புதமானது. போர்ச்சூழலில் மிகவவும் நெருக்கடியான நிலையில் எத்தனையோ இடையூறுகளிற்கும் சாவல்களிற்கும் முகம் கொடுத்துகடந்த பத்து ஆண்டு காலமாக புலிகளின் குரல் மகத்தான சேவையாற்றி வந்துள்ளது
![புலிகளின் குரல் வானொலிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி. 3](https://api.thaarakam.com/Images/News/2020/11/OfH2sSQuj4elaexI6saI.jpg)
இவ்வானோசையின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக நின்று சேவையாற்றி வரும் நிர்வாக பொறுப்பாளர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் , கலைஞர்களுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள். புலிகளின் குரல் வானோசையின்
உன்னதமான விடுதலைப் பணி செம்மையாகத் தொடர எனது நல்லாசிகள்