வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டூஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
![மன்னாரிலும் மாண்டூஸ் புயலின் தாக்கம்! 1](https://cdn.virakesari.lk/uploads/medium/file/198927/WhatsApp_Image_2022-12-09_at_9.39.10_AM__1_.jpeg)
மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
சூறாவளி தாக்கத்தினால் நேற்று (08) இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான குளிர் நிலை ஏற்பட்டதோடு மழையும் பெய்தது.
![மன்னாரிலும் மாண்டூஸ் புயலின் தாக்கம்! 2](https://cdn.virakesari.lk/uploads/medium/file/198926/IMG-ec1584784c6fefce7fa362fba16a2cb1-V.jpg)
இதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
![மன்னாரிலும் மாண்டூஸ் புயலின் தாக்கம்! 3](https://cdn.virakesari.lk/uploads/medium/file/198925/WhatsApp_Image_2022-12-09_at_9.39.03_AM.jpeg)
மேலும் மன்னார் தாழ்வுபாடு மீன கிராமத்தில் மீனவர்களின் மீன் வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.மேலும் படகுகள் மற்றும் மீன் வலைகள் சேதமடைந்துள்ளது.