யாழில் சிறுமியொருவருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட சிறிய தந்தை கைது

You are currently viewing யாழில் சிறுமியொருவருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட சிறிய தந்தை கைது

யாழ். வலி. வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியொருவருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாலி சிறீலங்கா காவல்த்துறைக்கு  கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்று (20.07.2023) கைது செய்யபட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தை என சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பலாலி சிறீலங்கா காவல்த்துறை   பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமியின் தந்தை கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தந்தை இரவு கடற் தொழிலுக்கு செல்லும் வேளை சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் தந்தையின் சகோதரன் சிறுமியுடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த பகுதியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிறுவர் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை உத்தியோகத்தர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பலாலி சிறீலங்கா பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான சிறிய தந்தை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments