15வயது சிறுவனை வன்கொடுமை செய்த சிறீலங்கா காவற்துறை!

You are currently viewing 15வயது சிறுவனை வன்கொடுமை செய்த சிறீலங்கா காவற்துறை!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிறீலங்கா காவற்துறை  நிலையத்தில் மாவட்ட சமுக காவல்த்துறை  பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த காவல்த்துறை  பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

 

குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து வன்கொடுமை செய்ததாக காவல்துறைக்கு  கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்று (20.07.2023)  கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இது தொடர்பில் வவுனியா சிறீலங்கா காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments