வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

You are currently viewing வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடமலானது இன்று (15.12.2023) கற்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய கதிரேவேலு சஞ்சீவகாந்தி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் கூறியுள்ளனர்.

வவுனியா – சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தவறான முடிவை எடுத்த நிலையில் இளம் குடும்பஸ்தர் காணப்பட்டதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments