மாதவனை மயிலத்தமடுவிற்கு சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் : பேரினவாத சிங்களவர்கள் எதிர்ப்பு!

You are currently viewing மாதவனை மயிலத்தமடுவிற்கு சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் : பேரினவாத சிங்களவர்கள் எதிர்ப்பு!

மட்டக்களப்பு, மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பாக கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று பார்த்து அறிவதற்காக இன்று (15) காலை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அங்கு சென்றவர்களை, அம்பிட்டிய தேரர் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்கள் வழிமறித்து தடுத்துள்ளனர்.

அத்தோடு, தமிழ், சிங்கள மக்களின் இன நல்லுறவை சீர்கெடுக்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருந்து வருகை தந்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்து, கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளை பிரயோகித்து கலகத்தில் ஈடுபட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் தமிழ் மக்களின்  வாழ்விடததிற்கான கள விஜயத்தை தடுத்துள்ளனர்.

மாதவனை மயிலத்தமடுவிற்கு சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் : பேரினவாத சிங்களவர்கள் எதிர்ப்பு! 1
மாதவனை மயிலத்தமடுவிற்கு சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் : பேரினவாத சிங்களவர்கள் எதிர்ப்பு! 2
மாதவனை மயிலத்தமடுவிற்கு சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் : பேரினவாத சிங்களவர்கள் எதிர்ப்பு! 3

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் இருவரும் தமிழ் மக்களின் உரிமைகளிற்கு தொடர்ச்சியாக முன்னின்று போராட்டங்களை செய்து வருவதாலேயே சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடாத்தியுள்ளதுடன் இந்த நடவடிக்கையானது அவர்கள் தமிழ் மக்களிற்காக பணியாற்றுவதை சுட்டி நிங்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments