வவுனியாவில் இளைஞனை காணவில்லை என முறைப்பாடு!

You are currently viewing வவுனியாவில் இளைஞனை காணவில்லை என முறைப்பாடு!

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன்  என்ற இளைஞரை நேற்றையதினத்திலிருந்து காணவில்லை என வவுனியா சிறீலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றையதினம் (31) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி (தொலைபேசி இலக்கங்கள்.0771691244 / 0779302469) தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments