அச்சுறுத்தலுக்கும் மத்தியில் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

You are currently viewing அச்சுறுத்தலுக்கும் மத்தியில் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு பொலிஸார் விலகவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வீதியில் கொட்டகை அமைத்து போராட்டம் நடத்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், நேரில் சென்று அனுமதியளித்தார்.

அவர்களை சுயதனிமைப்படுத்தவும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தவும் பெயர் விபரங்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள