அச்சுவேலியில் ஹெரோயினுடன் மூவர் கைது!

You are currently viewing அச்சுவேலியில் ஹெரோயினுடன் மூவர் கைது!

அச்சுவேலி பகுதியில் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 60 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும், குட்டியப்புலம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 55 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும், இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 65 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட ஹெரோயினுடன் அச்சுவேலி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments