அப்பாவி இளைஞனை கொலை செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் ! வன்மையாக கண்டித்துள்ள த.தே.ம.மு.

You are currently viewing அப்பாவி இளைஞனை கொலை செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் ! வன்மையாக கண்டித்துள்ள த.தே.ம.மு.

அப்பாவி இளைஞனை கொலை செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் ! வன்மையாக கண்டித்துள்ள த.தே.ம.மு. 1

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சித்திரவதையால் சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

காவல்துறையினரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்வதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை தற்போது மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலையை வன்மையாகக் கண்டிப்பதாக சுகாஷ் கூறியுள்ளார்.

குற்றமிழைத்த காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments