அமெரிக்க – தலிபான் சமாதான உடன்படிக்கை! கட்டார் தலைநகர் டோஹா வில் ஒப்பந்தம் கைச்சாத்து!!

You are currently viewing அமெரிக்க – தலிபான் சமாதான உடன்படிக்கை! கட்டார் தலைநகர் டோஹா வில் ஒப்பந்தம் கைச்சாத்து!!

அமெரிக்காவுக்கும், ஆப்கனிஸ்தானின் தாலிபான்களுக்குமிடையில் பரஸ்பர சமாதான உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் வைத்து இச்சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

இவொப்பந்தத்தின்படி, தலிபான்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற வேண்டுமெனவும், 14 மாதகால இடைவெளிக்குள் ஆப்கனிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க, மற்றும் கூட்டுப்படைகள் அனைத்து முற்றாக விலக்கிக்கொள்ளப்படும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கனிஸ்தான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பகிர்ந்துகொள்ள