அம்பாறை இங்கினியாகலவில் பாடசாலை மாணவிகள் இருவரைக் காணவில்லை!

You are currently viewing அம்பாறை இங்கினியாகலவில் பாடசாலை மாணவிகள் இருவரைக் காணவில்லை!

அம்பாறை இங்கினியாகலவில் பாடசாலை மாணவிகள் இருவரைக் காணவில்லை! 1அம்பாறை, இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி முதல் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என இங்கினியாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு மாணவிகளும் தாங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 15ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் 7 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பி.ஜி. அஷானி விஷ்மிகா மற்றும் ஆர்.எம்.பவீஷா நெத்மினி ஆகிய மாணவிகளே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் இங்கினியாகல பொல்வத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்று வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments