அம்பாறை பகுதியில் ஈவிரக்கமின்றி தாக்கப்படும் மாற்றுத் திறனாளி சுகாதாரப் பணியாளர் !

You are currently viewing அம்பாறை பகுதியில் ஈவிரக்கமின்றி தாக்கப்படும் மாற்றுத் திறனாளி சுகாதாரப் பணியாளர் !

அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச சபையின் சுகாதாரப் பணி ஊழியரை அவரது கடமை நேரத்தில் மிகக் கொடூரமாகக் கண்மூடித்தனமாகத் தாக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சுகாதாரத் தொழில் மேற்பார்வையாளரான முன்னாள் தவிசாளரின் சகோதரனே இவ்வாறு சுகாதாரப் பணி ஊழியரை ஈவிரக்கமிண்றி தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார்.

தாக்கப்படும் ஊழியரான சின்ராசா என்பவர் ஒரு மாற்றுத் திறனாளி என கூறப்படுகின்றது. இந்நிலையில்  சுற்றிருந்த சிலர் அதனை  வேடிக்கை பார்ப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் மனிதாபிமானமுள்ள ஒருவர்  தாக்குதலை தடுக்க சென்ற போதிலும் சுகாதாரத் தொழில் மேற்பார்வையாளர்  ஊழியரை  பாய்ந்துபாய்ந்து தாக்குகின்றமை கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த காணொளி தொடர்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள சமூக வலைத்தளவாசிகள், முன்னாள் தவிசாளரின் சகோதரன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments