அரியாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

You are currently viewing அரியாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் – அரியாலை நெடுக்குளம் பகுதியில் நேற்று மாலை சிறீலங்கா காவல்த்துறையினரால் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அரியாலை, நெடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றமையினாலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவர் காயமடைந்த நிலையில், அவர் பொலிஸ் காவலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன்போது மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் சிறீலங்கா காவல்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments