அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப் போராட்டம்!

You are currently viewing அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை சிறீலங்கா பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை சிறீலங்கா  பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் வீதியில் சிறீலங்கா பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப் போராட்டம்! 1

 

 

அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப் போராட்டம்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments