அவுஸ்ரேலியாவில் இலங்கை இளைஞன் சடலமாக மீட்பு!

You are currently viewing அவுஸ்ரேலியாவில் இலங்கை இளைஞன் சடலமாக மீட்பு!

அவுஸ்ரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்ரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments