இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று!

You are currently viewing இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 இலட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இதனால் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 91 இலட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 இலட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 இலட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments