இந்தியாவில் கொரோனா : ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா : ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 6767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 47,190 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லியில் பாதிப்பு அளவு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,868 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54,440 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3867 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள