இந்தியாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு பாதிப்பு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்தத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8889 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1147- ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று சங்கிலியை உடைக்க சிவப்பு மற்றும் ஆரஞ்சு மாவட்ட பகுதிகளை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

பகிர்ந்துகொள்ள