இந்தியாவில் மேலும் 3,754 பேர் பலி ; 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing இந்தியாவில் மேலும் 3,754 பேர் பலி ; 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் இன்று காலை வரையான கடந்த 24 மணிநேரங்களில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை 4 இலட்சத்தைக் கடந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று இதில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் 3,754 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 இலட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 86 இலட்சத்து 71 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 818 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இன்றுவரை 37 இலட்சத்து 45 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 17 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments