இந்தியா – கனடா பதற்றநிலையால் பாதிக்கப்படும் மாணவர்கள்!

You are currently viewing இந்தியா – கனடா பதற்றநிலையால் பாதிக்கப்படும் மாணவர்கள்!

இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே பதட்டநிலை தீவிரமடைந்து வருவதால், நிலைமை தெளிவாகும் வரை மாணவர்கள் மற்றும் பயணிகள் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கனடாவில் உயர்கல்விக்கான விண்ணப்பங்களில் ஆலோசனை நிறுவனங்கள் காத்திருக்கும் நிலையில், விசா விண்ணப்பதாரர்கள் சாத்தியமான விசா நிராகரிப்புகள் குறித்த கவலைகள் காரணமாக நியமனங்களை ஒத்தி வைக்கின்றனர்.

இதனால் மாணவர்கள், பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு உதவ வங்கிகள் மற்றும் NBFCகளுடன் இணைந்திருக்கும் Leverage Eduயின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி அக்ஷய் சதுர்வேதி கூறுகையில்,

‘இந்த விடயத்தில் உடனடியாக தெளிவு கிடைக்கும் மற்றும் அமுலுக்கு வரும் வரை, நாங்கள் கனடாவிற்கான விண்ணப்பங்களை நிறுத்தி, அவர்களை அமெரிக்க அல்லது பிரித்தானியாவுக்கு திரும்பிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 24-36 மணிநேரங்களில், கனடாவில் உள்ள மாணவர்கள், செயல்முறை முடிவடையும் மற்றும் விசாக்களுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையைத் தொடங்கும் மாணவர்கள் என அனைத்து வகைகளில் இருந்தும் எண்ணற்ற உணர்ச்சிகளைக் கண்டோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்தியா – கனடா பதற்றத்தினால் இந்திய மாணவர்களுக்கும், குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் இருந்து குடியேறியவர்களுக்கும் கனடா இரண்டாவது மற்றும் மிகவும் பிரபலமான இடமாக இருப்பதால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் சுற்றுலா, கலாச்சார குழுவின் தலைவர் தீபக் தேவா கூறுகையில்,

‘கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான தற்போதைய இராஜதந்திர நிலைப்பாடு விடுமுறை பயணிகளுக்கு உதவாது. சுற்றுலாவின் தாக்கம் சில மாதங்களுக்கு அது ஓயும் வரை அல்லது சர்ச்சைகளை சுமூகமாக தீர்க்க அரசாங்கங்கள் ஒப்புக்கொள்ளும் வரை நிச்சயமாக உணரப்படும்’ என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments