இனவாதம் கக்கிய உதய கம்மின்மிலவுக்கு திரு. கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

You are currently viewing இனவாதம் கக்கிய உதய கம்மின்மிலவுக்கு திரு. கஜேந்திரகுமார் எச்சரிக்கை!
இனவாதம் கக்கிய உதய கம்மின்மிலவுக்கு திரு. கஜேந்திரகுமார் எச்சரிக்கை!
உதய கம்மின்பில போன்றவர்களது இனவாத கருத்துக்களால் தமிழர்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கி விட முடியாதெனவும், அவர்களது இனவாத செயற்பாடுகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தப்போவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் முதல் கட்டமாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்கில் உள்ள சிங்கள மக்கள், மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் உதய கம்மின்பில குறிப்பிட்டிருந்ததையிட்டும் கருத்துரைத்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதய கம்மின்பில வரலாறு தெரியாத முட்டாள் என குறிப்பிட்டுள்ளதோடு, தமிழ் மக்கள் தெற்கில் இன்றுவரை தொடர்ச்சியாக வேட்டையாடப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்துத்தே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனவும் மேலும் குறிப்பிட்ட அவர், நாங்கள் தெற்கில் பாதுகாப்பாக இருந்திருந்தால் எவ்வாறு எனது தந்தை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர்க்காலத்தை விட தற்காலமே மோசமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ள திரு. கஜேந்திரபுமார் பொன்னம்பலம், போர்க்காலத்தில் புலிகள் இருந்த நிலையில், தமிழர் மீது கை வைத்தால் திரும்ப அடி விழும் என்று தென்னிலங்கைக்கு நன்கு தெரிந்த காலம் இருந்தமையையும் குறிப்பிட்டு, இப்பொழுது எந்தவொரு கவசமும் இன்றி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கு மக்கள் செயற்படவில்லை எனவும், வடக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்கள் கற்கின்றனர் எனவும், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கூட தட்டிப் பறித்து சிங்களவர்கள் வடக்கு கிழக்கிற்கு வருகின்றனர் எனவும், அவர்கள் சிங்களவர்கள் என்பதால் தமிழ் மக்கள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
போர்க்காலத்திலும் புலிகள் விகாரைகளை பாதுகாத்திருந்த நிலையில், தற்பொழுது தொல் பொருள் என்று சொல்லிக் கொண்டு தமிழ் பௌத்த இடங்களை சிங்களமாக மடை மாற்றுகின்றதை தொடரும் நிலையில், உதய கம்மின்பில போன்றவர்கள் தமிழர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அடக்கி ஒடுக்கலாம் என நினைத்தால் அது கனவிலும் நடந்தேறாது என்பதை அவருக்கு சொல்லிவைக்க விரும்புவதாகவும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்முரசம் செய்திச்சேவை
22.08.2023
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments