இனவாதிகளது கூட்டு மனநிலையானது தாமாக விரும்பி தமிழர்களது உரிமையை அங்கீகரிக்கப்போவதில்லை.

You are currently viewing இனவாதிகளது கூட்டு மனநிலையானது தாமாக விரும்பி தமிழர்களது உரிமையை அங்கீகரிக்கப்போவதில்லை.

2022இல்  பொருளாதார வீழ்ச்சியால்  உருவான எரிபொருள் நெருக்கடிக்கான பொறுப்பை தனிமனிதனில் கட்டி, அதற்கான பொறுப்பில் இருந்து தப்பியோட முனைந்தது சிறிலங்கா அரசு. பாராளுமன்றின் நடவடிக்கையை (உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை) கொள்கைரீதியில் அணுகி , இது அரசின், அரச கொள்கையின் வீழ்ச்சியேயன்றி,
இது தனி ஒருவரின் தலையில் கட்டி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியோடும் கண்ணாமூச்சி ஆட்டம் கிடையாது என அரசியல் தெளிவுடன் பாராளுமன்றில் முழங்கியவர் கஜேந்திரகுமார் .

சொந்த கூட்டத்தாலேயே குழிபறிக்கப்பட்ட உதய கம்மன்பில  கஜேந்திரகுமாரின்  தாயாரின் வீட்டை முற்றுகையிடுகிறார்

உதய கம்மன்பிலவுற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அணுகும் போது மட்டும் அல்ல , ஆரம்பம் முதலே அவர் ஒரு இனவாதி என்பது வெளிப்படையாக தெரிந்திருப்பினும், அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொள்கைரீதியாகவே அணுகியவர் கஜேந்திரகுமார்.

ஆனால், அதற்கு நன்றியாக உதய கம்மன்பில, கஜேந்திரகுமாரை  எதிர்க்க கூடாது என நாம் கூறவில்லை- எந்த எதிர்ப்பும் கொள்கைரீதியானதாக உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கூட்டுமனநிலை இது தான் என்பதை கம்மன்பில கும்பல் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments