இன்னமும் கரை திரும்பாத 45 மீனவர்கள்! – வடமராட்சியில் காத்திருக்கும் உறவினர்கள்!

You are currently viewing இன்னமும் கரை திரும்பாத 45 மீனவர்கள்! – வடமராட்சியில் காத்திருக்கும் உறவினர்கள்!

வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக 15 இற்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 45 இற்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பாமை தொடர்பில் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை

இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று 13 மீனவர்களுடன் மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து மீனபிடி நடவடிக்கைக்காக சென்றிருந்த ஓர் படகே இவ்வாறு மாலைதீவில் கரை ஒதுங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

இவ்வாறு இலங்கை மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் படகு எங்கிருந்து புறப்பட்டது என்றோ அல்லது இலங்கையின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இதேநேரம் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இலங்கை இந்திய கடற்பரப்பு அதிக கொந்தளிப்பாக இருப்பதனால் படகுகள் திசைமாறிச் சென்றிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments