தமிழக மீனவரின் சடலம் – காரைநகரில் கரையொதுங்கியது!

You are currently viewing தமிழக மீனவரின் சடலம் – காரைநகரில் கரையொதுங்கியது!

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2 ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து மாயமானார்.

மாயமான மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் நேற்று மதியம் அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments