இன்னும் புனிதத்தின் மீது வசைபாடும் போக்காளர்!

You are currently viewing இன்னும் புனிதத்தின் மீது வசைபாடும் போக்காளர்!

தன் இனம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக மட்டும் பல்லாயிரக்கணக்கில் அதியுச்ச தியாகத்தை செய்தவர்கள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்கள்.


அவர்களின் அற்பணிப்பும் நெறிபுரளாக்கொள்கையும் கடந்த 30 வருடங்களிற்கு மேலான ஆயுதபோராட்டத்திற்கு ஊடாக தாயகமண்ணையும் இறமையும் பாதுகாத்து வந்துள்ளது,இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆழமாக மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவில் ஆணிவேராக வேரோடி நிற்கிறார்கள் அந்த மறத்தமிழர்கள், இந்த நிலையை மாற்றலாமென சில புல்லுருவிகள் பகல் கனவு காண்கின்றனர். கவிதை, கட்டுரை, சிறுகதைக்கூடாக தங்களின் நஞ்சுகளை விதைக்க முனைகின்றார்கள்.

இவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் விடுதலைப்புலிகள் மீது காழ்ப்புணர்சி கொண்ட அல்லது துரோக செயற்பாடுகளுக்காக விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு வழி வந்தவர்கள், இவர்கள் எதிரான கருத்துகளை விதைத்து குமுகத்தை குழப்பவேண்டும், உரிமைக்கான போராட்டத்தினை பலவீனப்படுத்த வேண்டும் அல்லது விடுதலைப்புலிகள் விதைத்த தூய கனவை சிதைக்க வேண்டும என்ற தீய சிந்தனையைத்தவிர வேறு எந்த ஆரோக்கியமான செயற்பாடுகளுமற்ற வில்லங்கமானவர்களாகவே இருக்கின்றார்கள்.

அதுவும் விடுதலைப்புலிகள் அமைதியாகியதும் இவர்களின் வக்கிர புத்திகள் சமூக ஊடகங்களை அவ்வப்போது காகத்தின் மலம் போல் இவர்களின் அகங்களை பீச்சியடிக்கிறது.


இங்கே வேதனை என்னவென்றால் விடுதலைப்புலிகள் கோலோச்சி வாழ்ந்த காலங்களில் அவர்களின் வீரத்தினையும் தியாகங்களையும் கவிதை ,கட்டுரை, பாடல்கள் என எழுதி தங்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற சில கறுப்பாடுகளும் இன்று இந்த அருவருப்பான மனிதர்களோடு சேர்ந்து நின்று கருவறுக்கும் கருத்துக்களை பிரசவித்துக்கொண்டிருக்கின்றார்கள்,

ஏன்? எந்த தேசிய இயக்கங்களுக்கூடாக தங்களை வளர்த்துக்கொண்டார்களோ அந்த தேசிய இயக்கங்களுக்கு எதிராகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட அவலங்கள் 2009 வரை சிறீலங்கா அரசாலும் அதன் கூட்டுசக்திகளாலும் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு பிற்பாடு ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றது.


உண்மையில் 2009 இற்கு முன்பு மக்களை உசுப்பேத்திய இவர்கள் 2009 இற்கு பின்பு இன்னும் இனப்பற்றோடும் கொள்கைப்பற்றோடும் பயணித்திருக்கவேண்டும், மக்களின் உரிமைக்காக போராடியவன் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்.மற்றவன் போராடும் போது அவனின் குளிரில் காய்ந்துவிட்டு அவர்கள் இல்லையென்றதும் ஓடி ஒழிந்து கொள்வதும் அவர்களுக்கு எதிராக நா உயர்வதும் அறமல்ல துரோகம்.

நேர்மையையும் கொள்கையையும் குழிதோண்டிப்புதைத்துவிட்டு இப்போதும் தாமே சுத்தமான நதிகளெனவும் இன்னும் இனத்துக்காக போராடுபவர்கள் வெறும் கோசக்காரர்களென அடையாளப்படுத்த முனைவதும் வெறும் அயோக்கியத்தனம்.

குட்டைகளோடு சேர்ந்திருப்பது இன்னுமொரு குப்பை என உணராத மனோநிலையில் இருப்பவன் எப்போதும் எம்மைப்பொறுத்த மட்டில் மனநோயாளிதான் ஆகவே நோய்க்கோழி ஆயிரம் பொன் முட்டைகள் இட்டாலும் அந்த முட்டைகள் ஒவ்வொன்றும் அடுத்தவனுக்கு பிரயோசனமற்ற கூழ் முட்டைகள்தான், அப்படித்தான் எங்களைப்போன்றோரால் உங்களை பார்கமுடிகிறது,

எப்போது ஒருவன் தான் கொண்ட கருத்திலிருந்து தன் கொள்கையிலிருந்து எழுதுகோலின் திசையை மாற்ற முனைகிறானோ அல்லது தனது எண்ணத்தில் வர்ணத்தை மாற்றுகிறானோ அப்போதே தேசிய விடுதலைப்போராட்டப்பாதையில் அவன் உப்பில்லாப் பண்டம்.

ஆகவே தயவு செய்து உங்கள் நடுநிலை நயவஞ்சகத்தை நிறுத்திவிட்டு மாவீரர்களை காயப்படுத்துவதை நிறுத்திவிட்டு உங்கள் சுயநலங்களை மட்டும் பாதுகாத்துகொள்ளுங்கள்.

✍️தூயவன்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments