இன்று சென்னையில் கொரோனாவுக்கு 16 பேர் பலி

You are currently viewing இன்று சென்னையில் கொரோனாவுக்கு 16 பேர் பலி

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 95 ஆயிரத்து 857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்

பகிர்ந்துகொள்ள