இயல்பு நிலைக்கு கொண்டுவர பணியாற்றி வருகிறோம்: மன்னிப்புக் கோருகிறது பேஸ்புக்!

You are currently viewing இயல்பு நிலைக்கு கொண்டுவர பணியாற்றி வருகிறோம்: மன்னிப்புக் கோருகிறது பேஸ்புக்!

உலகம் முழுமையிலும் பிரபல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் உட்பட்ட சமூக வலைத்தளங்களே செயலிழந்துள்ளன.

அவை செயலிழந்துள்ளமைக்கான காரணம் வெளியாகவில்லை
தமது சேவை முடங்கியமை குறித்து பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!
தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் செயலிகள் ஸ்ம்பித்துள்ளமை குறித்து இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

சில பயனர்களினால் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை வெகு சீக்கிரத்தில் சரி செய்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என பேஸ்புக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments