இரகசியமாக வந்து சென்ற விமானங்கள் – கஜேந்திர குமார் சந்தேகம்!

You are currently viewing இரகசியமாக வந்து சென்ற விமானங்கள் – கஜேந்திர குமார் சந்தேகம்!

இலங்கையில் இன்று பாரிய விடயங்கள் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் பாரிய இரண்டு அமெரிக்க விமானங்கள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பு வட்டுக்கோட்டை சங்கரத்தை அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

அண்மையில் பாரிய இரண்டு விமானங்களின் வருகை தந்திருந்ததாகவும் ஆனால் தொடர்பாக ஊடகங்கள் அமெரிக்க தூதரகத்தை வினவியபோதும் அதற்கு பதில் வழங்கப்படவில்லை என கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் ஆனாலும் ஒரு தூதுக்குழுவில் ஆகக்கூடுதலாக 25 பேர் உள்ளடங்கியிருந்தாலும் எதற்காக இவ்வாறு இரண்டு காகோ விமானங்கள் வருகை தந்தமை தொடர்பாக பாரிய சந்தேகம் நிலவுவதாக கஜேந்திரகுமார் குறிப்பிடுகின்றார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக விரோத அரசாங்கம் என்றும் இந்த திருட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக வெளிநாட்டு தரப்பிற்கு சொத்துக்களை விற்கக்கூடிய நிலையிலேயே காணப்படுவதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வெளிநாடுகள் தமது நலன்களை அடைவதற்காக இலங்கையை சூறையாடக்கூடிய சூழலே காப்படுவதாக கஜேந்திரகுமார் குறிப்பிடுகின்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments