இரணைமடு விபத்தில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர் பலி! 

You are currently viewing இரணைமடு விபத்தில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர் பலி! 

கிளிநொச்சி -இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு பகுதியிலிருந்து ஏ9 வீதி நோக்கி பயணித்த குளிர்களி வண்டியுடன் எதிரே பயணித்த விசை ஈருருளி வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரிணைகளை கிளிநொச்சி சிறீலங்கா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments