இறம்பொடை நீர்வீழ்ச்சியில் சிக்கிய இருவரின் சடலங்களும் மீட்பு!

You are currently viewing இறம்பொடை நீர்வீழ்ச்சியில் சிக்கிய இருவரின் சடலங்களும் மீட்பு!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டதென கொத்மலை சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் நேற்றுமுன்தினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இருவரின் சடலம் மீட்கப்படாத நிலையில் நேற்றுமுன் தினம் பெய்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

நேற்று மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதியம் வேளையில் குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேணியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) என தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments