இனவழிப்பு சிறீலங்கா இராணுவத்தில் கொரோனா தொற்று 60 ஆகியுள்ளது!

You are currently viewing இனவழிப்பு சிறீலங்கா இராணுவத்தில் கொரோனா தொற்று 60 ஆகியுள்ளது!

வெலிசறை கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினர் கொரொனா தொற்றிற்குள் உள்ளாகியுள்ளனர்.

இதனால், வெலிசறை கடற்படை முகாமில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 அக உயர்ந்துள்ளது.

முகாமிற்குள் தொற்று அதிகரித்ததையடுத்து, முகாமிலுள்ள அனைத்து கடற்படையினரும் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர். அத்துடன், விடுமுறை மற்றும் கடமை நிமித்தம் அண்மைய நாட்களில் முகாமிலிருந்து வெளியேறிய அனைத்து கடற்படையினரையும் மீளவும் முகாமிற்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடற்படை தளத்திற்குள் தனியான தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள