ஈழத்தமிழர்களுக்கு நேரடியாக உதவ அனுமதி அளிக்க வேண்டும்!

You are currently viewing ஈழத்தமிழர்களுக்கு நேரடியாக உதவ அனுமதி அளிக்க வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு   நேரடியாக தமிழ்நாடு அரசு உதவ அனுமதி அளிக்க வேண்டும் என 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக நேற்று இரவு புதுடெல்லி சென்றார். விமான நிலையத்தில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முதல் நாளான இன்று ஒன்றிய பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து 14 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளன.

– அதில், காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான பிரச்சனையில் தீர்வு காணவேண்டும்.

– பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

– கச்சத்தீவு மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

– நிலக்கரி குறித்த விவகாரங்களில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான இரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

– ரெய்கார் – புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவிக்க வேண்டும்.

– மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல் வேண்டும்.

– மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு.

– உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிய வேண்டும்.

– பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த வேண்டும்.

– காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகப்படுத்த வேண்டும்.

– டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

– தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்.

– சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும், 

– மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைப்பது.

– தேசிய கல்வி கொள்கை – 2020 ரத்து.

– சென்னை மெட்ரோ ரயில் திட்டம் – II – இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல்.

– 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும்.

– இலங்கை தமிழர் பிரச்சினை – ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் வழங்க வேண்டும்.

 – இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

 – தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் உருவாக்க வேண்டும்.

– நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிட வேண்டும்.

– கூடங்குளம் அணுமின் திட்டம் – செலவழித்த அணு எரிபொருள் நீக்க வேண்டும்.

– நரிக்குறவர்கள் / குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய.பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments