ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை : சீமான் கோரிக்கை!

  • Post author:
You are currently viewing ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை : சீமான் கோரிக்கை!

ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அனைத்து முகாம்களிலும் கொரோனாவைத் தடுக்க போதிய பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தருவதுடன் முன்பரிசோதனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர் முகாம்களில் கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக சுகாதாரத்துறையின் மூலம் அனைத்து முகாம்களையும் ஆய்வுசெய்து ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் உடல்நலனை பரிசோதித்து, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

அனைத்து முகாம்களிலும் கொரோனாவைத் தடுக்க போதிய பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தருவதுடன் முன்பரிசோதனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். மத்திய, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து துயர்துடைப்பு உதவிகளும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.”

இவ்வாறு சீமான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள