உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பூநகரி கடற்தொழிலாளர்கள் !

You are currently viewing உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பூநகரி கடற்தொழிலாளர்கள் !

பூநகரி – கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகுவலை தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்தொழிலாளர்கள் நேற்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலவன்குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள், சிறகுவலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாடா வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனைதொடர்ந்தே கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று காலையிலிருந்து இரவிரவாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments