உண்ணாநிலைப்போராட்டத்தில் இரத்தவாந்தி எடுக்கும் ஈழத்தமிழ் உறவுகள்!

You are currently viewing உண்ணாநிலைப்போராட்டத்தில் இரத்தவாந்தி எடுக்கும் ஈழத்தமிழ் உறவுகள்!

ஒரு முறை குரல் கொடுத்து குடும்பங்களோடு வாழ எங்களுக்கு உதவுங்கள் – YouTube

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட சகோதரன் டிலக்சன் என்பவரது நிலை மிகமிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது. வாந்தியில் இரத்தவாந்தி கலந்து செல்லும் அளவுக்கு மிக மிக மிகக் கொடுமையாக உள்ளது.

வணக்கம் சொல்வது கூட மனம் இல்லாத இந்த நிலைமையில உங்களுக்கு இந்த பதிவு நாம் கொடுக்கிறோம். உண்ணாவிரதமிருந்த 17 பேரில் 11 நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்த டிலக்சன் என்பவர் நிலை மிகமிக மோசமாக இருந்தது. மூச்சு எடுப்பதற்கு கூட சிரமப்படும் அளவிற்கு அவரது உண்ணாநிலைப் போராட்டம் இந்த பட்டினிப்போராட்டம் கொடுமையாக இருந்தது.

அரசு மருத்துவமனையில் இருந்து அவசர வைத்திய சாலை ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் போது உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்க வேண்டும் என அந்த அவசர ஊர்தியில் வந்த வைத்தியர் சொல்லி இருந்த பொழுது நாங்கள் அதற்கு ஏற்பாடு செய்தோம்.

அந்த ஊரில் இருந்த வைத்தியர் அவசர உதவி வழங்கிய போது இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் இவரது நிலை கவலைக்கிடமாக சுயநினைவு இழந்து போகும் அளவிற்கு சென்று இருக்கும் என மிக வேதனையுடன் தெரிவிக்கும் போது எங்களில் எத்தனை பேர் அழுது இருப்போம் என்று எண்ணிக்கையில் சொல்ல முடியாது.

ஏன் இவ்வாறு எங்களை உயிரோடு கொல்கிறார்கள் என்பதனை அறியாமல் உணர்வற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிக மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்த கவலைக்கிடமான இருக்கும் அவர் சகோதரர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பதை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தயவுசெய்து இரண்டு குழந்தைகளின் தந்தை என் உயிரை பறித்து விடாதீர்கள் எங்களுக்காக ஒரு முறை குரல் கொடுத்து தங்கள் குடும்பங்களோடு வாழ எங்களுக்கு உதவுங்கள் என்று நம் தமிழ் உறவுகளை பார்த்து மிகமிக கெஞ்சி கேட்டுக் கொள்கிறோம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments