உதைத்தேன் உடலில் படவில்லை உளறும் இராணுவ அதிகாரி!

You are currently viewing உதைத்தேன் உடலில் படவில்லை உளறும் இராணுவ அதிகாரி!

குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும், அது அந் நபரின் உடலில்படவில்லை என குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன் கேணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் மற்றும் சமூக வளைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி தொடர்பில் அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர் மிக்க இராணுவ அதிகாரி என குறிப்பிடும் லெப்டினன் கேரணல் விராஜ் குமாரசிங்க, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பாதாள உலகக் கோஷ்டியினர் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாக கூறினார்.

தான் காலால் உதைத்தது உண்மையே என குறிப்பிட்ட லெப்டினன் கேர்ணல் விராஜ் குமாரசிங்க, எனினும் அந்த தாக்குதல் குறித்த சிவிலியன் மேல் விழவில்லை எனவும், குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments