எத்தடை வரினும் மாவீரர் தினம் இடம்பெறும் – சிவாஜிலிங்கம்!

You are currently viewing எத்தடை வரினும் மாவீரர் தினம் இடம்பெறும் – சிவாஜிலிங்கம்!

எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதிபெறத் தேவையில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று(18) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

உயிர்நீத்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. அதே போல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறதேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் வழமைபோல் இடம்பெறும்.

எத் தடைவரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய கொரோனா சூழ்நிலைக்கு ஏற்ப சுகாதார முறைகளை பின்பற்றி ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமைபோன்று நடத்துவோம்.

எம்மை கைது செய்தால் கைது செய்யட்டும் ஆனால் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம், என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள