எனது பெயரிலும் எனது கட்சியின் பெயரிலும் போலி அறிக்கைகள்!

You are currently viewing எனது பெயரிலும் எனது கட்சியின் பெயரிலும் போலி அறிக்கைகள்!

தனது பெயரில் போலியான அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும், அவ்வாறான அறிக்கைளை நம்ப வேண்டாம் என்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக எனது பெயரிலும் எனது கட்சியின் பெயரிலும் சிலர் போலியான முகநூல் கணக்குகளை திறந்தும் இணைய தளங்கள் வாயிலாகவும் தவறான கருத்துக்களையும் தகவல்களையும் பரப்பி வருகின்றமை எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பில் நான் வெளியிட்டதாக ஒரு போலியான அறிக்கையை வெளியிட்டு சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

பொதுமக்கள் இத்தகைய போலியான தகவல்கள் குறித்தும் அவற்றைப் பரப்புபவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவும் வழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று இந்த சந்தரப்பத்தில் வேண்டுகோள் விடுகின்றேன்.

எனது எந்த ஒரு அறிக்கையும் எனது அலுவலகத்தால் உத்தியோகபூர்வமாக மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமே ஒளிய இவ்வாறான முகநூல் கணக்குகள் வாயிலாக அனுப்பப்படமாட்டா.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள