எழுச்சியோடும் உறுதியோடும் முன்னெடுக்கப்படும் ஈருருளிப்போராட்டம்!

You are currently viewing எழுச்சியோடும் உறுதியோடும் முன்னெடுக்கப்படும் ஈருருளிப்போராட்டம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நேற்று (17.02.2023 ) காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி நெதர்லாந்திலிருந்தும் மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமாகியிருந்தது.
இந்த மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ( International Criminal Court) முன்பாக தொடங்கப்பட்டு ,றொட்ராம் மாநகரசபையில் நினைவுபெற்று,இன்று (19.02.2023)பிறேடா மாநகரிலிருந்து பெல்சியம் எல்லையடைந்தது.அங்கு பெல்சியம் பொறுப்பாளர் , செயற்பாட்டாளர்கள்,ஈருருளிப்பயண போராட்டக்கார்ர்கள் மற்றும் மக்கள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் வரவேற்றனர்.
தொடர்ந்து ஈருருளிப்பயணம் பல கிராமங்களூடாக அன்வேர்பன் நகரத்த்தில் அமைந்துள்ள மாவீர்ர் நினைவுக் கல்லறையில் மாலை நிறைவுபெற்றது.இன்றைய நாள் பயணத்தில் பெண்கள் மற்றும் இளையோர் கலந்துகொண்டமையானது சிறப்பானதாக அமைந்துள்ளதுடன், அனைவரது வரவேற்பினையும் பெற்றுள்ளது.
தொடர்ந்து பெல்சியம் , லக்சம்பேர்க், ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக சுவிஸ் நாட்டிற்குள் சென்று .06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.
ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments