ஏறாவூர்- மைலம்பாவெளி வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலம்!

You are currently viewing ஏறாவூர்- மைலம்பாவெளி வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலம்!

மட்டக்களப்பு, ஏறாவூர் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலத்தை இன்று (16) ஏறாவூர் சிறீலங்கா காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாவிக்குச் சென்ற பொலிஸார், மீனவர்களின் உதவியோடு வாவியில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

கைகள் மற்றும் கால்களின்றி உருக்குலைந்து பொருமிய நிலையில் சடலம் காணப்படுகிறது.

வாவியில் உள்ள முதலை கடித்ததனால் தான் சடலம் கைகள், கால்களின்றி உருக்குலைந்திருப்பதாக அங்கிருந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், மட்டக்களப்பு ஈச்சந்தீவு நாவற்காட்டைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய அமரசிங்கம் ஜெயச்சந்திரன் என்பவரே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஈச்சந்தீவு துறையடியில் இருந்து தனது தோணியில் சென்றுள்ளார்.

எனினும், அவர் வீடு திரும்பாததால், தாங்கள் ஈச்சந்தீவை ஒட்டிய வாவியில் அவரை தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே இன்று சடலம் மைலம்பாவெளி வாவியில் மிதப்பதாக தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

குறித்த சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனதீவு மற்றும்  ஏறாவூர் சிறீலங்கா காவற்துறையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர்- மைலம்பாவெளி வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலம்! 1
ஏறாவூர்- மைலம்பாவெளி வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலம்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments