ஒன்ராறியோவில் இதுவரை 223 பேர் பலி!

You are currently viewing ஒன்ராறியோவில் இதுவரை 223 பேர் பலி!

கனடா- ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 5,759 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 223 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பிராம்டன் வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர் ஒருவர் நேற்று கொரோனாவினால் உயிரிழந்தார். கனடாவில் கொரோனாவுக்கு சுகாதாரத் துறை பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

பகிர்ந்துகொள்ள