ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 ஐ நிராகரிப்போம் – ஊர்தி பவனி!

You are currently viewing ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 ஐ நிராகரிப்போம் – ஊர்தி பவனி!

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி நேற்று இரவு வவுனியாவை வந்தடைந்தது.

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை வலுசேர்க்கும் முகமாகத் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி ஒன்று நேற்று மாங்குளம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பவனி மல்லாவி, விடத்தல் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இரவு வவுனியாவை வந்தடைந்தது. இன்று காலை வவுனியா நகரிலிருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கிச் சென்று அங்கிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.

ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 ஐ நிராகரிப்போம் - ஊர்தி பவனி! 1
ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 ஐ நிராகரிப்போம் - ஊர்தி பவனி! 2
ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 ஐ நிராகரிப்போம் - ஊர்தி பவனி! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments