ஒஸ்லோ : குழந்தைக்கு இனிப்புப்பண்டம் வாங்கச் சென்றவருக்கு கிடைத்த அதிட்டம்!

  • Post author:
You are currently viewing ஒஸ்லோ : குழந்தைக்கு  இனிப்புப்பண்டம் வாங்கச் சென்றவருக்கு கிடைத்த  அதிட்டம்!

திங்கள்கிழமை பிற்பகல், செஞ்சிலுவைச் சங்கத்தின் மீள்சுழற்சி அதிட்டலாப சீட்டில் (Pantelotteriet) ஒஸ்லோவைச் சேர்ந்த சிறு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒரு மில்லியன் குரோனரை வென்றுள்ளார்.

நான்கு பேரைக்கொண்ட இந்த குடும்பம், வாரத்திற்கு ஒரு முறை பொருட்களை வாங்குவது வழக்கம், அன்றைய தினம் அவரது கணவர் பொருட்களை வாங்கச் சென்றதாகவும், அவர் குழந்தைகளுக்கான “ஈஸ்டர் சாக்லேட் முட்டை” (påskeegg) வாங்க மறந்துவிட்டார் என்பதால், அதை வாங்க தான் கடைக்கு விரைவாகச் செல்ல வேண்டியிருந்தது என்றும், செல்லும்போது வாசலில் இருந்த மீள்சுழற்சிக்கான போத்தல்களையும் எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள