ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 உடலங்களின் எண்ணிக்கை 948 ஆக உயர்வு!

You are currently viewing ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 உடலங்களின் எண்ணிக்கை 948 ஆக உயர்வு!

ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் உடலங்களின் எண்ணிக்கை 948 ஆக உயர்வடைந்துள்ளன.

கொவிட்-19 காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் ஓட்டமாவடியில் தொடர்ச்சியாக அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று (ஜூலை-09) மேலும் இருவரின் உடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்ட உடலங்களின் எண்ணிக்கை 948 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments