கசிப்பு உற்பத்தி பொருட்களுடன் நபரொருவர் வடமராட்சியில் கைது!!

You are currently viewing கசிப்பு உற்பத்தி பொருட்களுடன் நபரொருவர் வடமராட்சியில் கைது!!

பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சியில் சட்ட விரோதமாக கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்புவடிப்பதற்குரிய உபகரணங்களுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் அதே இடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.​

மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபர் வல்லிபுரகுறிச்சி பகுதியில் சுமார் 65 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்களை மறைத்து வைத்திருந்த வேளையில் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வடமராட்ச்சிக்கிழக்கில் பல இடங்களில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் இதானால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவருகின்றது.இவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments