கடன் மறுசீரமைப்பில் வெளிப்படைத்தன்மை முக்கியம்! – அமெரிக்கா வலியுறுத்தல்.

You are currently viewing கடன் மறுசீரமைப்பில் வெளிப்படைத்தன்மை முக்கியம்! – அமெரிக்கா வலியுறுத்தல்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் பங்கேற்கும் சகல தரப்பினரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநரை நேற்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடன் வழங்குநர்கள் அனைவரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் மத்திய வங்கி ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனூடாக, கடன் மறுசீரமைப்பு செயன்முறையை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments