கணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவனை தீ வைத்து எரித்த கொடூரம் – முல்லைத்தீவில் சம்பவம்

You are currently viewing கணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவனை தீ வைத்து எரித்த கொடூரம் – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் கணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இந்த சம்பவம் 19.09.2020 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

45 அகவையுடைய கணவன் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கணவன் வெளியிடத்தில் வாழ்ந்து வந்துள்ள நிலையில்

சனிக்கிழமை விடுமுறை நாழில் தனது பிள்ளைகளை பார்க்க வீட்டிற்கு சென்ற கணவனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள