கத்தி முனையில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

You are currently viewing கத்தி முனையில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தோரை கத்தி முனையில், மிரட்டி 10 பவுண் தங்க நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments